தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் விபத்து அரசு நடவடிக்கை என்ன??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள கட்டப்பனை குட்டி காணம் பகுதி வழியாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை குட்டிகானம் முதல் சப்பாத்து என்கிற பகுதி வரைக்கும் வாகன விபத்துகள் என்பது தொடர் கதையாக நடந்து வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்பொழுது கேரளா மாநிலத்தில் சபரிமலை சீசன் என்பதால் வாகனங்களின் வரத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். இவ் வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்யவும் வேகத்தை குறைக்கவும் தகுதி காவல்துறையினரும் போக்குவரத்து அலுவலரும் எதையும் கண்டு கொள்வதில்லை.

அது மட்டுமல்லாது தொடர்ந்து நடைபெறும் வாகன விபத்துகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளையோ அல்லது வேகத்தை அதிகரிக்காத வண்ணம் சோதனை சாவடி அல்லது வேக கட்டுப்பாடு பற்றி பதாகைகள் போன்ற மாற்றங்களையும் ஏற்படுத்தினால் இது போன்ற விபத்துக்கள் உடனடியாக தடுக்கப்படும் எனவும் இந்த வருடத்தில் கடந்த மாதம் மட்டுமே பத்துக்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக இதற்கான தீர்வை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp