கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூர் அடுத்த கோபாலபுரம் பகுதியில் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மங்கை வள்ளி கும்மியின் 112-வது அரங்கேற்றத்திற்கு கோவில் விழா கமிட்டி மற்றும் கோபாலபுரம் மங்கை வள்ளி நடன குழு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று தை மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் மங்கை வள்ளி கும்மியின் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்நிலையில் அரங்கேற்ற விழாவிற்கு மங்கை வள்ளி கும்மியின் ஆசிரியர் மது போதையில் வந்ததால் அரங்கேற்றம் பாதியிலேயே நின்றது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்; “இது போன்று குடிபோதையில் அரங்கேற்றத்திற்கு வரும் ஆசிரியர்களை நம்பி பெண்களை தயவு கூர்ந்து அனுப்பாதீர்கள்.
28.1.2024 ஞாயிற்றுக்கிழமை R கோபாலபுரம் அருள்மிகு மாகாளியம்மன் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மங்கையர் வள்ளி கும்மி அரங்கேற்றுக்கு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த மூன்று நான்கு மாதங்களாக எங்களின் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியர் முதல் அனைத்து மகளிரும் ஒன்று சேர்ந்து பல லட்சங்களை செலவு செய்து அவரவர் வேலைகளை விட்டுவிட்டு தினமும் வள்ளி கும்மி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கொங்கு மண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக இன்று அனைத்து கிராமங்களிலும் வள்ளி கும்மி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு மங்கை வள்ளி கும்மி ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். ஆசிரியர் வெள்ளநத்தம் P. சண்முகசுந்தரம் மது போதையில் நேற்று நடந்த அரங்கேற்றத்திற்கு வந்திருந்தது எங்கள் அனைவரையும் மனவேதனையும் எரிச்சலும் அடையச் செய்கிறது. இவரைப் போன்ற ஒரு சில ஆசிரியராக இருப்பதினால் நமது பாரம்பரிய வள்ளிக்குமியின் வளர்ச்சி கேள்விக்குறியாகிறது. இன்று எங்கள் அரங்கேற்று இடைவெளியில் எங்கள் கிராமத்தில் உள்ள கோபாலபுரம் இன்டர்நேஷனல் சென்று மது அருந்திவிட்டு நிலை தடுமாறும் அளவிற்கு இருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆசிரியர் என்பவர் ஒரு தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று எங்கள் வீட்டு சிறுமிகளையும் மகளிரையும் அரங்கேற்றத்திற்கு அனுப்பி வைத்தோம் இவரின் செயல்பாடுகள் எங்கள் ஊரைச் சேர்ந்த அனைவருக்கும் இவர் செய்த செயல் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. ஆகையால் எங்கள் விழா கமிட்டியை சேர்ந்தவர்கள் இந்த கும்மி அரங்கேற்றத்தை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். அதற்கு அவர் நீங்கள் ஆரம்பியுங்கள் முடியுங்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கோபத்துடன் அனைவரையும் எச்சரித்தார். நாங்கள் கேட்டதற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட நிகழ்ச்சியிலும் 111 அரங்கேற்றத்தையும் நடத்தி இருப்பதாக கூறினார்.
எப்படி இவரை நம்பி நமது மகளிர்கள் பயிற்சி எடுத்திருப்பார்கள் என்பது எங்களுக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் போன்ற ஆசிரியரிடமிருந்து பெண்கள் பாதுகாப்பு இருக்கவும் எங்கள் ஊரில் நடந்தது போல பல ஊரிலும் இவரைப் பற்றி புகார் வந்து கொண்டிருக்கிறது. மது அருந்திவிட்டு கும்மிக்கே ஒரு அவப்பெயர் ஏற்படுத்தும் இது போன்ற ஆசிரியர்களை தவிர்க்கவும். தயவுகூர்ந்து இந்த மாதிரி ஆசிரியர்களை நம்பி பெண்களை அனுப்பாதீர்கள். இவரு மாதிரி ஆள்கள் எல்லாம் ஆசிரியர்கள் என்று சொல்வதற்கு தகுதியற்ற கயவர்கள் கூட்டம். தயவு கூர்ந்து பெண்களை அனுப்பாதீர்கள் என்று மனவேதனையுடன் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.