தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி மாவீரன் சுந்தரலிங்கனார் முழு திருவுருவ வெங்கல சிலை திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் கலந்து கொண்டார்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் மாவீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தில் அமைந்துள்ளது. இந்த மணி மண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் மார்பளவு கல்ச்சலை உள்ளது. இந்தக் கல் சிலையை அகற்றி மாவீரன் சுந்தரலிங்கனார் குதிரை மேல் இருக்கும் விதமாக மூழுதிருவுருவ வெங்கல சிலை அமைக்க வேண்டும் வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார். அப்போது குதிரையில் மேல் மாவீரன் சுந்தரலிங்கனார் அமர்ந்தவாறு முழுதிருவுருவ வெங்கல சிலை விரைவில் அமைக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கவர்னகிரி மாவீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் ரூ.45 லட்சம் செலவில் மாவீரன் சுந்தரலிங்கனார் குதிரை மேல் அமைந்தது போல் முழு திருவுருவச் சிலை திருவுருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டன.
நேற்று மாலை இந்த மாவீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ வெங்கல சிலையை காணொளி காட்சி மூலம் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கவர்னகிரி மாவீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து மாவீரன் சுந்தரலிங்கனார் திருவுருவச் சிலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் மாவீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் துணைத் தலைவர் காசிவிசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாவீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ்க்கு அமைச்சர் கீதாஜீவன் பொன்னாடை அனுவித்து மரியாதை செலுத்தினார். அகில இந்தியா மாவீரன் சுந்தரலிங்கம் பேரவைத் தலைவர் L K முருகன் அவர்கள் தலைமையில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, சுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின், யூனியன் ஆணையாளர் வசந்தா, கூடுதல் ஆணையாளர் கிரி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.