கடந்த ஆண்டு திறக்கப்பட்ட லுலு ஹைப்பர் மார்க்கெட் எனும் மாலில் அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. உணவுபொருட்கள் முதல் எலக்ட்ரிக் பொருட்கள் வரை அனைத்து வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டே சென்றது. கோவையில் உள்ள லுலு மாலானது மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வந்தது. லுலு தரப்பிலும் மக்களுக்கு ஆபர்களை வழங்கி நற்பெயரை வாங்கி வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பாநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்காக சிக்கனை வாங்கி உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் போய் சிக்கனை கழுவிய போது துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் ஒருமுறை கழுவியபோதும் துர்நாற்றம் வீசவே உடனடியாக லுலு மாலிற்கு அவர் வாங்கிய் சிக்கனுடன் வந்து மேலாளரிடம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அந்த சிக்கன் அப்புறப் படுத்தப்பட்டு அதற்கு பதிலாக பணமும் திருப்பி அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையிடமும் புகார் அளிப்போம் என கூறிவிட்டு அவர் சென்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் மக்களும் லுலு மால் மீது கடும் கோபமடைந்தனர். இந்நிலையில் லுலு மால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது இந்நிலையில் நேற்று உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் அதிரடியாக லுலு மாலில் உணவுப்பொருட்களை ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் கெட்டுப்போன இறைச்சிகள் போன்று எதுவும் இல்லை. மேலும் இது போன்று மற்றொரு முறை நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட
தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.