டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் சார்பில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தின்போது ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், அவர்கள் சத்தான உணவுகளை உண்ணவும் மற்ற மகப்பேறு தொடர்பான தேவைகளுக்கும் உதவியாக இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும் ரூ. 4,000 /- மதிப்புள்ள ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தகுதிகள்
🔖பயனாளி வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவராகவோ அல்லது அரசு சிறப்பு தகுதிகள்
உடையவராகவோ இருக்க வேண்டும்.
🔖அரசு மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்.
🔖பயனாளி 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
🔖இந்த நிதிஉதவி முதல் இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
🔖கருசிதைவிற்கோ, கருக்கலைப்பிற்கோ உதவி தொகை வழங்கப்படாது.
🔖தாய் மரணம் அடைந்து விட்டால் குழந்தை பாதுகாவலருக்கு உதவி தொகை வழங்கப்படும்.
🔖குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்தவுடன் இறந்து விட்டாலோ தாய்க்கு உதவி தொகை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
🔖தாய்சேய் நல அட்டையின் நகல்
🔖இலங்கைத் தமிழர் எனில் புலம் பெயர்ந்தோர் சான்றிதழ் நகல்.
🔖உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினராயின் அதற்கான அட்டையின் நகல் அல்லது தொழிலாளர் நல வாரிய அட்டையின் நகல்.
🔖வறுமைக் கோட்டிற்குட்பட்டவராக இருப்பதற்கான சான்றிதழ்.
நிபந்தனைகள்
🔖களப்
பணியாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
🔖PICME எண் பெற வேண்டும்.
🔖தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளிகள் பெயரில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.
–MMH.