மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளர் P.பரமசிவத்தின் குரல் தமிழக சட்டசபையில் எதிரொலித்தது வால்பாறை மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் சாதாரண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வழி வகுக்கும் இத்திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்திட்டம் மலைப்பகுதிகளில் குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளர் P.பரமசிவம் மகளிர் நலனை கருத்தில் கொண்டும் குறிப்பாக குறைந்த சம்பளம் வாங்கும் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வால்பாறை பகுதிக்கும் மகளிர் இலவச பேருந்து சேவை வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை நிதி நிலை அறிக்கையில் மலைப்பகுதியாக உள்ள வால்பாறைக்கு மகளிர் இலவச பயணத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து P.பரமசிவம் கூறுகையில்; இத்திட்டம் வால்பாறைக்கு வந்தது மன மகிழ்ச்சியாக உள்ளது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கையை அமைச்சரிடம் நேரடியாக எடுத்துக் கூறிய வால்பாறை தி மு க நகரச் செயலாளர் சுதாகர் என்ற குட்டிக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திமுக நகரச் செயலாளர் குட்டி என்கிற சுதாகர் தலைமையில் துணைச் செயலாளர் சரவண பாண்டியன் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில், நகர மன்ற உறுப்பினர் ஜே பி பாஸ்கர், மாரியம்மாள், கவிதா பெண் நகர மன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈகா பொன்னுச்சாமி சௌந்தரபாண்டியன், ஈகா தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வாங்கி தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp