தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது திமுக அரசை கண்டித்து, அதிமுக எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஏற்பாட்டில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியது; ஐந்து வயது குழந்தைகள் முதல் 75 வயதில் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. கடத்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருட்கள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. ஜபார் சாதிக் மீது போதைப்பொருட்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவர் திமுக குடும்பத்தில் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய அரசு இந்த வேலையை செய்துள்ளது. அந்த பணத்தை வைத்து சினிமா தயாரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம் உள்ளது. இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ரஜினிகாந்த் ஏன் மவுனமாக இருக்கிறார் இனி கடவுள் நினைத்தாலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என பேச வேண்டியதுதானே என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் Ex MLA, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் சேர்மன் தாமோதரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனபதி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் சின்னத்துரை, செல்வி, சாந்தி, கார்ட்டன் பிரபு, மூர்த்தி, கருப்பசாமி, சிவசங்கர பாண்டியன், சொக்கன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.