மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்த ஆலோசனை நடத்திடவும் ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நயனார் நாகேந்திரன் அவர்களை தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளர் முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க இணைய சேர்மன் E.S சகாயம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்நிகழ்வில் நாகர்கோவில் வடக்கு மண்டல பார்வையாளர் நாகராஜன் மற்றும் ஜாபர் சாதிக் ஷேட் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
-கன்னியாகுமாரி, இந்திரன்.