கோவை மாவட்டம் வால்பாறை அரசு பணிமனையில் இருந்து இயங்கி வரும் பல பேருந்துகள் பழைய பேருந்துகளாக உள்ளன. வால்பாறையை சுற்றிலும் உள்ள எஸ்டேடுகளுக்கு இந்த பேருந்துகள் தான் பயணிகளை ஏற்றி சென்று வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சூழ்நிலையில் இந்த பழைய பேருந்துகள் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் மேலும் மலைப்பகுதியில் பேருந்து இயங்குவதால் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். ஏனென்றால் மலைப்பகுதியில் இரவு நேரங்களிலோ மற்ற சமயங்களிலோ பழுது ஏற்பட்டு நடுவழியில் நிற்கும் பொழுது வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் நின்றால் பெரும் அச்சம் ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதேபோல் தான் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து ( TN 43, N 0526.) பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலை அட்டகட்டி இருவத்தி மூணாவது கொண்டை ஊசி வளைவு அருகில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர் பழுதான பேருந்துகளை இயக்கி வருவதால் பேருந்துகள் அங்கங்கே நிற்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்குவதற்கு பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மேலும் யானை சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அரசு பேருந்து பொழுதாகி நின்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.