கோவை மாவட்டம் வால்பாறை தமிழக தேர்தல் ஆணையர், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர, பொள்ளாச்சி சார் ஆட்சியாளர், வால்பாறை தேர்தல் பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோரின் ஆலோசனைக்கிணங்க வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய புகைப்பட அரங்கம் அமைத்து வாக்காளர்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் வால்பாறை தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், வால்பாறை பகுதியில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டிப்பாக வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அனைவரும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் அந்த புகைப்பட அரங்கில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
வால்பாறை,
-P.பரமசிவம்.