தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதிக்குட்பட்ட மக்களிடையே உள்ள அச்சத்தை போக்குவதற்காகவும், நுாறு சதவிகித ஓட்டுப்பதிவிற்கு மக்களை உத்வேகப்படுத்தவும் ஆனைமலையில் ஏப்ரல் 6ஆம் தேதி காலை 10 மணி அளவில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி,ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார்,உதவி ஆய்வாளர் முருகநாதன், கோட்டூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் இந்த ஊர்வலம் ஊர்வலம் ஆனைமலையில் பொள்ளாச்சி சாலையில் உள்ள LRTயிலிருந்து துவங்கி நெல்லு குத்து பாறை, பழைய பேருந்து நிலையம் மற்றும் ஆனைமலை முக்கோணம் வழியாகச் சென்று சேர்த்து மடை சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு அணி வகுப்பு ஊர்வலம் முடிவடைந்தது.
செய்தியாளர்
-P.சின்ன முத்துசாமி, ஆனைமலை.