கோவையில் பைக்-ஆட்டோ மோதி வாலிபர் பலி…!! காவல்துறையினர் விசாரணை…!!!

கோவை போத்தனூர் குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் நிஜாமுதீன் (30). இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் மதுக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவும், பைக்கும் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட நிஜாமுதீன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான நிஜாமுதீனுக்கு சஜனா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp