கோவை மலுமிச்சம்பட்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி!!!

கோவை பொள்ளாச்சி, பாலக்காடு சாலை அன்பு நகரை சேர்ந்தவர் அன்வர் பாஷா மகன் முகமது ஷெரிப் (26). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சைக்காலஜி 2ம் ஆண்டு படித்துக் கொண்டு, சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் தனது பைக்கில் முகமது ஷெரிப் பொள்ளாச்சியில் இருந்து சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிபாளை யம் சாலையில் சென்ற போது, முன்னாள் சென்ற மற்றொரு இரு சக்கர வாகன ஓட்டி திடீரென வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் கட்டுப் பாட்டை இழந்த முகமது ஷெரிப்பின் இரு சக்கர வாகனம் முன்னாள் சென்ற இரு சக்கர வாக னத்தின் மீது மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி முக மது ஷெரிப் மீது ஏறி சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp