கோவை பொள்ளாச்சி, பாலக்காடு சாலை அன்பு நகரை சேர்ந்தவர் அன்வர் பாஷா மகன் முகமது ஷெரிப் (26). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சைக்காலஜி 2ம் ஆண்டு படித்துக் கொண்டு, சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் தனது பைக்கில் முகமது ஷெரிப் பொள்ளாச்சியில் இருந்து சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிபாளை யம் சாலையில் சென்ற போது, முன்னாள் சென்ற மற்றொரு இரு சக்கர வாகன ஓட்டி திடீரென வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் கட்டுப் பாட்டை இழந்த முகமது ஷெரிப்பின் இரு சக்கர வாகனம் முன்னாள் சென்ற இரு சக்கர வாக னத்தின் மீது மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி முக மது ஷெரிப் மீது ஏறி சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.