கோவை நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து கோவை புறப்பட்டது. அந்த பேருந்து அவினாசி சாலை கோல்டுவின்ஸ் அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்தில் புகை வந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் பேருந்தை நிறுத்திய போது அதில் தீப்பிடித்தது. உடனடியாக பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், தீ மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவியது.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் கருகி நாசமானது. பேருந்தின் டீசல் டேங்கில் மின் விபத்து ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தால் அவினாசி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.