கோவை, வனச் சரகம் தடாகம் மத்திய மாங்கரை பகுதிக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று காட்டு பன்றி மீது மோதியுள்ளது. அதில் மாங்கரை சோதனை சாவடிக்கு அடுத்து ஆனைகட்டி – கோவை சாலையில் ஓரமாக இறந்த நிலையில் கிடந்து உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதை தடாகம் குட்டவெளியை சேர்ந்த மருதாச்சலம் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவரும் யாருக்கும் தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று வெட்டி கூறு போட்டு காட்டுப்பன்றி கறியை விற்க முயற்சி செய்துள்ளனர்.
வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வனப் பணியாளர்கள் அவர்களை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்து வெட்டி வைத்து இருந்த சுமார் 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை கைப்பற்றி கோவை வனச ரகத்திற்கு எடுத்து வந்து பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.