தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையில் டிப்பர் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த டிரைவர்பலி!!

தூத்துக்குடி மாவட்ட ஓட்டப்பிடாரம் அருகே குறுக்கு சாலையில் டிப்பர் லாரியில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி பலி – ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மகன் ராதாகிருஷ்ணன் என்ற வெள்ளையன் (38) என்பவருக்கு லிந்தாரூத்மேரி என்ற மனைவியும் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி டிரான்ஸ்போர்ட் என்ற டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் டிப்பர் லாரியில் குறுக்கு சாலை பகுதியிலுள்ள தனியார் தார் கம்பெனியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக தார் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாரிக்கு நடை இல்லாத காரணத்தினால் குறுக்குசாலை பகுதியில் உள்ள தனியார் தார் கம்பெனியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் உறங்கியுள்ளார் இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது இதில் ராதாகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடல் கருகி இறந்த நிலையில் இருந்த ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டிப்பர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-எஸ் நிகில் 

ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp