கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள பாலப்பட்டி பகுதி வனப் பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதனால் அவ்வப் போது காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் பாலப்பட்டி எம்.ஜிஆர் நகர் பகுதியில் ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக அங்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத் துறையினர் மற்றும் காஜாமைதீன் தலைமையிலான பாம்பு பிடி வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து ராஜநாகத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அரியவகை மற்றும் கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை நெருங்குவது சற்று கடினம் என்ற நிலையிலும் சாமர்த்தியமாக பாம்பு பிடி வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பாம்பின் உடல்நிலை குறித்து வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உணவு எதுவும் உட்கொள்ளாததால் சோர்வான நிலையில் பாம்பு இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உரிய முதலுதவிக்கு பின்னர் பிடிபட்ட ராஜநாகத்தை வனத் துறையினரின் உதவியுடன் பாம்பு பிடி வீரர்கள் குஞ்சப்பனை அடர் வனப் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.