கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் குழந்தைகள் காப்பக கட்டிடம் உள்ளது. அப்பகுதியில் வாழும் குழந்தைகள் காப்பகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் அன்றாடம் வேலைக்கு செல்வதற்கு முன் குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டு செல்வது வழக்கம். 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த காப்பகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
காப்பக கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை புதுப்பித்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வாழும் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.