கோவை, தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் மொட்டை கார்த்தி (39) என்பவர் குடிபோதையில் சத்தியநாராயணன் (37) என்பவரை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக கார்த்திகேயன் மொட்டை கார்த்தி மீது தொண்டாமுத்தூர் காவல் நிலைய அடிதடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியான அவர் மீது தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கார்த்திகேயன் மொட்டை கார்த்தி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வுத்தரவின் அடிப்படையில் குற்றவாளியான கார்த்திகேயன் மொட்டை கார்த்தி என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.