பொள்ளாச்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆண்டாள் அறக்கட்டளை மற்றும் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை
இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்விற்கு நகர்மன்ற உறுப்பினர் எம்.கே. சாந்தலிங்கம் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ட்ரன்ஸ் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகரின் முக்கிய பகுதியான வார்டு பகுதியில் தொடர்ந்து பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எதிர்வரும் வெய்யிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் கேன்கள் துண்டுகள் மற்றும் குடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் எம் .கே சாந்தலிங்கம் மற்றும் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் ஆகியோர் வழங்கி தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியம் குறித்தும் அவர்களின் சேவை பற்றியும் அவர்களுக்கான தேவைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பேசினர்.
இதில் நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் முருகேசன். ஒப்பந்ததாரர் சிபிச் சக்கரவர்த்தி மற்றும் ஆண்டாள் அறக்கட்டளை நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.