தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கழக கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லம், கே. கைலாசபுரம் ரோசரி முதியோர் இல்லம் ஆகிய இடங்களில் உள்ள முதியோர்களுக்கு கேப்டனின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன்,மாநகர் மாவட்ட பொருளாளர் விஜயன்,மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் லாரன்ஸ், ஒன்றிய அவைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிச்சைமணி, முத்துவேல், பவுல்ராஜ், l,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.