காந்திபுரம் டவுன் பேருந்து நிலைய பின்புறம் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 2 சிறுவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்ததில் அவர்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து போலீசார் சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய சிறுவர்களை கைது செய்தனர். சகோதரர்களான இருவரும் கோவையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இதேபோல், கோவை பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியில் சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் போதை மாத்திரை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்ற கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள் தர்மபுரி பாலக்கோட்டை சேர்ந்த கோகுல் (20) மற்றும் கிணத்துக்கடவு தாமரை குளத்தை சேர்ந்த மவுலீஸ்வரன் (18) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 160 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.