கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை ஐயர் பாடி பகுதியில் மரங்கள் அதிக அளவு வெட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டுவதாக புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இதை நேரில் கண்டு விசாரித்த பொழுது அவர்கள் தகாத முறையில் பதில் அளிக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது போன்ற மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து இடையூறாக பாதிக்கப்படுகிறது. அவ்வழியே வரும் வாகன ஓட்டுநர்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகிறார்கள்.
இதனை கண்காணித்து உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறை இருந்து
-திவ்யக்குமார்.