சோலையார் எஸ்டேட் பகுதியில் இரட்டை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு….!!பொதுமக்கள் பீதி!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் இரட்டை காட்டு யானைகள் உலா வந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணம்பள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட நிஜாமுடி, தோணி முடி, தாய் முடி, சோலையார் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

அதிலும் காட்டு யானைகள் குட்டிகளுடன் ஆங்காங்கே முகாமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர் சுற்றுலாப் பயணிகள் செல்லும் பிரதான சாலையின் தடுப்புச் சுவரிலிருந்து கீழே இறங்கி குடியிருப்பு மற்றும் பயணிகளின் நிழல் கூட்டத்திற்கு எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இரட்டைக் காட்டு யானைகள் எப்பொழுது பார்த்தாலும் பிரிவதே கிடையாது மற்ற யானை கூட்டத்துடன் சேர்வதும் இல்லை இரட்டையர்கள் தனியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அச்சமூட்டி வருகின்றது. மேலும் வால்பாறை பகுதியில் புதிதாக யானைகள் வரவு அதிகமாக இருப்பதாக வனத்துறையினருக்கு எஸ்டேட் பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர், அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. கோவையை பொறுத்தவரை தற்பொழுது வனவிலங்கு நடமாட்டமும் யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

அதிலும் தொண்டாமுத்தூர், நீலகிரி, கூடலூர், உள்ளிட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மாலை நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவ்வப்போது யானைகள் மனிதர்களை தாக்கி மனிதர்கள் படுகாயம் மற்றும் உயிரிழக்கும் சூழல் நிலவி வருவதால் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனப்பகுதி எல்லையில் உள்ள அகழிகளை மறுசீரமைப்பு செய்து பெரியதாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp