கோவை உக்கடம் அருகே வின்சென்ட் சாலை பகுதியில் வாலாங்குளம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளமானது சீரமைக்கப்பட்டு அழகாக மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அங்கு பல்வேறு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு புதிய அடையாளமாகவே இந்த வாலாங்குளமானது மாறி இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கோவை மாவட்டத்தில் உள்ள வாலாங்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டு இருந்த மக்கள் பார்த்து உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 45 வயது இருக்கும் என்றும் எப்படி குளத்தில் விழுந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் உக்கடம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த நபர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா , இல்லை அவரை யாரும் கொலை செய்துள்ளனரா என காவல் துறை சார்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இது தொடர்பாக அந்த பகுதியில் சென்றவர்களிடம் உயிரிழந்த நபர் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . அதிகாலையில் அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதை கண்ட தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.