கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா சுற்றுலா தளமான மூணார் அருகே உள்ள குட்டியார்வேலி என்ற பகுதிக்கு செல்லும் வழியில் சாலை ஓரத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளும் உணவு கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை தெரு நாய்கள் இழுத்து வாகனம் செல்லும் சாலையில் இடுவதால் அங்கு வாகன போக்குவரத்து பாதிப்படைவதாகும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் கொசுக்களின் தொல்லை அதிகரித்து பல நோய்களை ஏற்படுத்துகிறது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளனர். கழிவுகளை அகற்ற பலமுறை புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தேவிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் உடனடியாக குப்பைகளை அகற்றி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் வலுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.