தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பஸ் நிலையம் அருகே ஆட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை மதியம் வரை நடைெபறும். பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை வாங்குவதற்காக நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் சுமார் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும். மேலும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் முகூர்த்த நாட்களில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.
வருகிற 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எட்டயபுரம் சந்தை நேற்று முன்தினம் மதியம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்க திரண்டனர். வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.