சங்கரன்கோவில்:
அக். 23
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலி சத்திரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகள் தவசி கண்ணு என்ற தவசித்தாய் வயது 60 . திருமணம் ஆகாத தவசி கண்ணு என்ற தவசித்தாய் தனது அண்ணன் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் நேற்று காலை அருகில் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் தவசி கண்ணு என்ற தவசித்தாயை அதே தெருவை சேர்ந்த சண்முகையா மனைவி
அன்ன துரைச்சி (55) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தவசி கண்ணு என்ற தவசித்தாய் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த தவசி கண்ணே என்ற தவசி தாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயற்சி செய்தபோது அவரது உறவினர்கள் அன்ன துனரச்சியை கைது செய்ய வேண்டும் என்று கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பனவடலி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னத் துனரச்சியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தென்காசி மாவட்ட செய்தியாளர்
-திருமலை குமார்.