வால்பாறையில் அலட்சியப் போக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வணிக சம்மேளனம் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் சரிவர செயல்படாததால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியாளரின் பார்வைக்கு தமிழக வணிக சம்மேளனத்தின் மாநில துணைச் செயலாளர் P.பரமசிவம் தலைமையில்,மாநில செயற்குழு தலைவர் சரவணன்,கோவை மாவட்ட செயலாளர் கவின் முன்னிலையில் வால்பாறை பகுதியில் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை,மின்சாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறைகளில் அடிப்படை பிரச்சனைகள் தீர்ப்பதற்கும் வால்பாறையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பொது மக்களும் வெளியேறுகிறார்கள். அவர்கள் வாழ்வாதத்தை பாதுகாக்க புகார் கொடுத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வணிகர் சம்மேளனம் சார்பாக வால்பாறை இருந்து சுமார் 100 பேர் நடை பயணமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்தித்து மனு கொடுப்பதற்கு வால்பாறை காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கைகளை ஆதாரத்துடன் கொண்டு சேர்த்தனர்.

ஆட்சித் தலைவர் அவர்களும் கோரிக்கையை ஏற்று வால்பாறையில் இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதாக எந்த அதிகாரியும் தெரிவிக்கவில்லை என்பதோடு கண்டிப்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளையும் அழைத்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம் என்று உறுதி அளித்தார்.

இந்நிகழ்வின் போது கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் மருத பாண்டி, கோவை தெற்கு தொகுதி செயலாளர் ராஜா ,வால்பாறை தொகுதி செயலாளர் இப்ராஹிம்,கே டி எம் மணிகண்டன், சுரேஷ் ,பாலு, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp