கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அக்கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிக பயனாளர்களை இந்த மருத்துவமனை பயனடைய செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அமைச்சர், முதலமைச்சர் பொறுப்பேற்ற நாளிலிருந்து காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார். தமிழக முழுவதும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயன்பெற்று வருவதாகவும் கூறினார்.
தற்போது மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்று கூறிய அமைச்சர், அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு புதிய புதிய கருவிகள் இருப்பதையும் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை இணைந்து செயல்படுவதால் தான் தமிழ்நாட்டில் மருத்துவ துறை வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பதாக கூறினார். மேலும், மக்களை தேடி மருத்துவம் உட்பட தமிழக அரசின் பல்வேறு மருத்துவ திட்டங்கள் குறித்து வெளிநாடுகளில் எடுத்துரைக்கப்படுவதாகவும் அண்மையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா சபையின் 79-ஆவது பொது சபை கூட்டத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகப்பெரிய சாதனையை செய்து கொண்டிருக்கிறது என்று பாராட்டி தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கியிருப்பதாக கூறினார்.
மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முகாம்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஈரோடு, திருப்பத்தூர் ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்ய தொடங்கி இருப்பதாகவும் இதுவரை 109 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதாகவும் அதற்காக ₹27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்திருப்பதாகவும் கூறிய அமைச்சர், மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி C.V.ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.