கடந்த நவம்பர் 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டில் பிரபல சுற்றுலா தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். தினசரி ஏரளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கோடை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஏப்ரல், மே சீசன் காலங்களில் நீலகிரிக்கு கோடை வெயிலை சமாளிக்க, குடும்பத்துடன் மக்கள் வருவார்கள்.
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பிரபலமானது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் வளைவுகள், மலைகள், அருவிகள், பாலங்கள், அடர்ந்த வனப் பகுதியை கடந்து ஊட்டி செல்கிறது. இதில் பயணிக்க பலரும் அதிகம் விரும்புவர். அவ்வப்போது மலை ரயில் பாதையில் மண், பாறைகள் சரிவு, பராமரிப்பு பணிகள் காரணமாக மலை ரயில் சேவை குறிப்பிட்ட நாட்கள் ரத்து செய்யப்படும். சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் மீண்டும் ரயில் இயக்கப்படும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கல்லாறு – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை கடந்த 5ம் தேதி வரை ரத்தானது. ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் முடிவுறாததன் காரணமாக கடந்த சில நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே 5 நாட்களுக்குப் பிறகு (நவம்பர் 8) மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. கடந்த நவம்பர் 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.