கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாட்டர் பால் எஸ்டேட் பகுதியில் சாலை குண்டும் குழியுமாகவும் இருப்பதோடு அப்பகுதியில் தண்ணீர் வீணாகி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது சமயம் சாலை கொண்டும் குழியமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் இச்சாலை வழியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகளும் பயணம் செய்கிறார்கள் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தண்ணீர் வீணாகிறது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது இதை சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை அப்படி சிந்தித்து இருந்தால் சரி செய்திருப்பார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு தண்ணீரை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் வரி பணம் தண்ணீர் போல் வீணாகிறது அதேசமயம் அதிகாரிகள் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக நாமும் களத்தில் இறங்கினோம் உண்மையாலுமே நெடுஞ்சாலைத்துறை வால்பாறை பகுதிகளில் தேவையில்லாத இடங்களில் விளம்பரம் பதாகைகள் வைப்பது அமைச்சர் பெருமக்கள் வரும் பொழுது வெள்ளை அடிப்பது இது போன்று பல வழிகளில் மக்கள் வரிப்பணத்தையும் வேலை நேரத்தையும் வீண் அடிக்கிறார்கள் அதே சமயம் வால்பாறை பொள்ளாச்சி மெயின் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் மர கிளைகளின் வாதுகளை அகற்ற பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
-P. பரமசிவம்.