கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் பழைய இரும்புகள் மற்றும் ஆணிகள் போன்ற பொருட்களை சாலையிலேயே போட்டு உடைக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அரசு பஸ்,லாரி,கார் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் டயர்கள் பழைய இரும்புகள் மற்றும் ஆணிகள் போன்ற பொருட்களின் மீது ஏறி பஞ்சர் ஆகிவிடுகிறது. இதே போல் நடுமலை செல்லும் வழியில் மரக்கடை அருகாமையில் பழைய ஆணிகள் இரும்புகள் ஆகியவற்றை சாலையிலேயே கிடைக்கின்றது. அப்பகுதியில் சாலையில் போட்டு வைத்திருக்கும் விறகுகள் மற்றும் பழைய பொருட்கள் சாலை ஓரங்களில் போட்டு வைத்திருப்பதினால் வாகனங்கள் பழுதாகிறது என வாகன ஓட்டுனர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றன.
இதனைக் கண்டு வால்பாறை நகராட்சி மற்றும் சாலை அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து இடையூராக இல்லாமல் வாகனங்கள் பழுதாகாமல் இருக்கும் என வாகன ஓட்டுனர்களும் பொதுமக்களும் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
One Response
இந்த செய்தியை காணொளிகளாக எடுத்து வலைதளங்களில் போடலாம் காணொளியில் ஆக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் தீர்வு ஆனா அது ஒன்றை வழி