கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அவர்களை நேரில் சந்தித்து வால்பாறை சி ஐ டி யு ஆட்டோ சங்க நிர்வாகிகள் “நாங்கள் கஷ்டப்படுவது போல் புதிதாக ஆட்டோ வாங்கி கஷ்டப்படுபவர்கள் அதேபோல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்து குறைந்த மக்கள் உள்ள இப்பகுதியில் புதிய ஆட்டோ அனுமதி வழங்க வேண்டாம்” என மனு கொடுத்து இருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மனு ஏற்கப்பட்டு உடனடியாக பரிசீலனை செய்து புதிய ஆட்டோ அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில்; “மகிழ்ச்சியான செய்தி உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொடுத்த பாதுகாவலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி உள்ளிட்டோருக்கு இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம் எங்களுக்கு ஆட்டோ நிறுத்துமிடத்திற்கு நிழல் குடை நகராட்சி மூலம் அமைத்துக் கொடுங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டோம் அதையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி தீர்வு காணப்படும். மேலும் எங்களுக்கு துணையாக நின்று குரல் கொடுத்த அனைவருக்கும் பாகுபாடின்றி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M. சுரேஷ்குமார்.