விளாத்திகுளம்: அகில இந்திய LIC முகவர்கள் சார்பாக மாபெரும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அகில இந்திய LIC- முகவர்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு LIC -பிரீமியத்திற்கான GST- வரியை ரத்து செய்யவும், குறைந்தபட்ச காப்பு தொகையை ஒரு லட்சமாக குறைத்திடவும்,LIC பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்திடவும், மாபெரும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து உரையாற்றினார்கள். நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் கோட்ட துணை பொதுச்செயலாளர் முருகன் தலைவர் குளத்தூர் பாண்டியன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, அய்யனார் ஒய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா இடது கம்யூனிஸ்ட் ஜோதி எல்ஐசி முகவர்கள் ராமசாமி, ராமச்சந்திரன்,பெத்துராஜ், காந்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.