கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் (கோவை டு பாலக்காடு) சாலையின் தற்போதைய நிலை:- பொதுவாக அப்பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தாலும் வாகன பயன்பாடு அதிகரித்த்தாலும் அப்பகுதியில் எப்பொழுதும் சாலை போக்குவரத்து நெரிசல் காணப்படுவது இயல்பாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக (கோவை டு பாலக்காடு) வழியில் முக்கிய சாலையின் நடுவே குழிகள் தோண்டவும், மூடவும் ஆக செயல்கள் நடந்து வருகிறது. மேலும் தற்போது இருவழி சாலையாக இருக்கும் இப்பகுதியில் மாற்று வழியாக ஒரே தடத்தில் இரு திசைகளில் வாகனங்கள் செல்லும்படி செய்து வருவது பெரும் சிரமமாக உள்ளது. மேலும் குழிகள் தோண்டும் போது அல்லது அதனை மூடும் போதோ அங்கிருந்து புறப்படும் மண் புகை மண்டலமானது பகல் நேரத்திலும் (mist) எனப்படும் பனிமூட்டத்தை போன்று காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறு சிறு வாகன விபத்துகளும் நடந்து வருகிறது, எனவே தற்போது செய்து வரும் சாலை பணியினை சற்று துரிதப்படுத்தி முடித்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜஸ்டின் ரஞ்சித்.