கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராமக்கல் மேடு என்ற பகுதியில்
ரவீந்திரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பல நாட்களாகவே மது போதைக்கு அடிமையான அவரது மகன் கங்காதரன் பலமுறை வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதன் காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதுபானம் அருந்துவதை நிறுத்தி விட்டதாக இரண்டு மாதத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பாவிற்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தகப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மகனை தாக்கியதில் தலையில் அடிபட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் வந்து அருகில் உள்ள தூக்கம் பாலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக குற்றவாளியை கம்பம் மெட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.