நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் 2-வது நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு த.வெ.க ஆதரவு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்போராட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக த.வெ.க மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர்
சம்பத்குமார் தலைமையில் கட்சியினர் நேரடியாக கல்லூரிக்கு சென்று கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தில்
கலந்து கொண்டனர். மேலும், இதில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் பேசிய போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளான; உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ESI, EPF பிடித்தம் செய்து பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் -உள்ளிட்ட கோரிக்கைகளை த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் கொண்டு சென்று, தமிழ்நாடு அரசு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதற்கு தமிழக வெற்றி கழகம் தங்களுடன் இணைந்து போராடும் என்று ஆதரவு தெரிவித்தார். இப்போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலா, கட்சி நிர்வாகிகள் வீரபாண்டி மகேஷ், ஆரோக்கியராஜ், செந்தில்குமார், வினோத் கண்ணன், சித்ரா, கௌதமி, செண்பகக்கனி, பொன்காசிராம், அருள் ராஜா, கபாலீஸ்வரர், ராமகிருஷ்ணன், சந்திரன், சண்முகராஜ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு த.வெ.க-வின் ஆதரவு தெரிவித்தனர்.

(தொடர்ந்து 2-வது நாளாக நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலைக்கழகத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் இக்கல்லூரி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…)

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp