கோவை மாவட்டம் வால்பாறை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பவன் குமார் கிரியாப் பவனர் அவர்கள் தலைமையில் வால்பாறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பொழுது மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரமசிவம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவரிடம் வால்பாறையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, பெரம்பலூர், பொன்னமராவதி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும். நான்கு, ஐந்து தலைமுறைகளாக சொந்த ஊரில் வாழ்வாதாரத்தை இழந்து குடியிருக்க இடமில்லாமல் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வால்பாறை பகுதியிலே தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிகின்றன இவர்களுடைய உற்றார் உறவினர்கள்,ரத்த சொந்தங்கள். அனைத்தும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ளன இவர்கள் குடும்பத்தில் உடல்நிலை சரியில்லை என்றாலும், விசேஷங்கள் நடைபெற்றாலும் கோவில் திருவிழா நடைபெற்றாலும் சொந்த ஊரில் தான் போக வேண்டும் அவ்வாறு போகும்பொழுது பொள்ளாச்சியில் இருந்து போவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. இவர்களின் நலனை கருத்தில் கொண்டு வால்பாறையில் இருந்து மேற்கொண்ட மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் அவ்வாறு பேருந்துகள் இயக்கினால் வெளி மாவட்டங்களில் இருந்து வால்பாறைக்கு வருபவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதையும் தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறான் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார் மனுவை பரிசினை பண்ணி உடனடியாக தீர்வு காணப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உறுதியளித்தனர். இது தொடர்பாக இப்பகுதியில் இருக்கும் பெரியவர் கூறுகையில் வால்பாறையில் இருந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் எளிதாக சொந்த ஊருக்கு போக வேண்டும் என்றால் வால்பாறையில் இருந்து எங்கள் சொந்த ஊருக்கு பேருந்து இயக்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்றார். நாமும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.