கோயம்புத்தூர் நகர போக்குவரத்து காவல் துறையின் ஏற்பாட்டில், இன்று 13.03.2025 (வியாழக்கிழமை) சக்தி ரோடு, அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் ஹெல்மெட் அவேர்னஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களும் உயிர் கிளப் உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நகர போக்குவரத்து துறை துணை ஆணையர் திரு. எஸ். அசோக் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். அவர் தனது உரையில், “ஹெல்மெட் அணிவது என்பது ஒரு சட்டப்பூர்வக் கடமையே, அது உயிரை பாதுகாக்கும் கவசமாகும். விபத்துகளில் இருந்து உயிர் பிழைப்பதற்கான முதல் பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதே” என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம், விபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முறைகள், மற்றும் பொது இடங்களில் ஒழுங்கு குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை மக்களிடம் வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் “பாதுகாப்பான போக்குவரத்து உறுதி செய்யும் விதிமுறைகளை பின்பற்றுவோம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் திரு. ஏ. சேகர் அவர்கள் தலைமையில், போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் உயிர் கிளப் உறுப்பினர்களின் உறுதிமொழி எடுப்பதன் மூலம் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.
(A. சேகர், AC Traffic, East)
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-MMH