சேலத்தில் இருந்து ஈரோடு திருப்பூர் வழியாக கோவைக்கு இயக்கப்பட்டு வந்த கோவை சேலம் பாசஞ்சர் ரயில் சேவையை மீண்டும் துவக்க கோரிக்கைகள் வலுத்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை சேலம் இடையே வண்டி எண். 06802 பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது இந்த ரயில் ஈரோடு திருப்பூர் வழியாக இயக்கப்பட்டு வந்த நிலையில் நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ஒரே ரயிலாக இருந்ததால் நாள் தோறும் ஏராளமான ரயில் பயணிகளும் பொதுமக்களும் பயனடைந்து வந்தனர்.
இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்ட நிலையில் துவங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது மூன்று ஆண்டுகள் கடந்தும் ரயில் சேவையை துவங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என நான்கு மாவட்ட பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியிருப்பதாவது சேலத்தில் இருந்து கோவை வரை இருக்கும் பல பகுதிகளில் இந்த ரயில் நின்று சென்று வந்த நிலையில் சேலம் ஈரோடு கோவை திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை மீண்டும் தண்டவாளம் மேம்பாட்டு பணி என காரணம் காட்டி ஓராண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மூன்று ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் இந்த ரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நான்கு மாவட்ட பயணிகள் நாள்தோறும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் இயக்கப்பட்டால் நாள்தோறும் 5000க்கும் அதிகமான பயணிகள் பயன் பெறுவர். எனவே தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் இது குறித்து ஆலோசித்து மார்ச் மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுத்து ஏப்ரல் முதல் இந்த ரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.