தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் முறையாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் குடிதண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெருக்களில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் சூழ்ந்து கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொது சுகாதார கழிப்பிடத்தை கூட அங்குள்ள பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது,
இதனால் அப்பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தங்களது அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருமாறு கோரிக்கை மனு அளித்தனர் மேலும் எட்டையாபுரம் பகுதியில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட உள்ள பேவர் பிளாக் சாலையே காலதாமதப்படுத்தாமல் உடனடியாக விரைந்து அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளனர் பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேரூராட்சியில் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.