
தூத்துக்குடி, ஜூலை.6-
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தாலுகா அலுவலக வளாகம்த்தில் உள்ள தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாநில தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார்,இதில் மறைந்த இரண்டு உறுப்பினருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, தொடர்ந்து வரவு செலவுகள் வாசிக்கப்பட்டது, பின்னர் கடந்த செயற்குழு கூட்டத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ராஜினாமா செய்ததினால் புதிய மாவட்ட தலைவராக ஆ கனகராஜ் ( ஊரக வளர்ச்சித்துறை) மாவட்ட செயலாளராக ஆ முருகேசன் ( கால்நடைத்துறை) என இருவரையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் அனைத்து அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.







