
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மெஞ்ஞானபுரம் தனியாா் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முகாமில் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு, மாணவர்களின் உரிமைகள், சமூகப் பொறுப்பு மற்றும் சட்டம்–ஒழுங்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் முதல் படியாகும். சட்டத்தை அறிந்த மாணவிகள் சமூகத்தை காக்கும் நாளைய குடிமக்கள் என்று பேசினாா். மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் சகாயராஜ், வக்கீல்கள் அந்தோணி பிச்சை, நாகராஜ், சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் வக்கீல் நான்சி, வக்கீல்கள் அக்ஷயா லட்சுமி, மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.









