இந்திய பேட்மிண்டன் அணிக்கு கோவையை சேர்ந்த மாணவர் தேர்வு!!!

கோவை: சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க்கிறார். இதனை ஏற்படுத்தி தந்த கோவை, ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை கொடிசியா பகுதியில், ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் இளம் பேட்மிண்டன் வீரர் நிகில், இவர், பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2026-இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு பதக்கங்களை வென்றதுடன்,

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகி கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த தேசிய தரவரிசைப் போட்டி, இந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜூனியர் பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றாகும். மேலும், வரவிருக்கும் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் போட்டியாகவும் இது நடைபெற்றது.

17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய நிகில், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இந்த சிறப்பான செயல்திறனின் மூலம், அவர் ஜூனியர் இந்திய அணியில் இடம்பிடித்து தனது பேட்மிண்டன் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக கோவை ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் நிகிலின் இந்த வெற்றி, அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் பலனாகும். இந்த சாதனை, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்கும் மையமாக ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் நற்பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, இம்மையத்தில் பயிற்சி பெற்ற ஹரிஹரன், ரூபன் மற்றும் அருள் ஆகியோரும் இதே ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வாகி, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர்.

இதுகுறித்து ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் நிறுவனரும், இயக்குனருமான ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது.. நிகிலின் இந்த சாதனை ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமி குடும்பத்திற்கே பெருமை சேர்க்கும் தருணமாகும். இந்தியாவின் மிகக் கடுமையான ஜூனியர் போட்டிகளில் பதக்கங்களை வென்று, இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளது அவரது பல ஆண்டுகால கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இளம் திறமைகளை அடையாளம் கண்டு, சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கம். நிகில், அவரது பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம்,” என தெரிவி்த்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts