குற்றால அருவிகளில் குளிக்கத் தடை… சீசன் தொடங்கிய நிலையில் ஏமாற்றம்..!

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாரல் மழையுடன் இதமான சுழலை ரசித்து செல்கின்றனர் சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் கால கட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஓரிரு வாரத்தில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்தும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும் சீசன் முன் அனுபவத்தை அளித்துள்ளது.

நாளைய வரலாறு செய்தியாளர்

-அன்சாரி நெல்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp