
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் தென்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகாமையில் சிறுத்தை பதுங்கி இருப்பதை பொதுமக்களும் தோட்டத் தொழிலாளிகளும் கண்டு வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
நாய்கள் அதிகமாக இருப்பதால் சிறுத்தை அந்தப் பகுதியில் பதுங்கி இருக்கிறது. இது இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் உலா வருகிறது. இதனைக் கண்டு எஸ்டேட் நிர்வாகிகளிடம் தெருவித்தப் பொழுது வால்பாறை நகராட்சி மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் இப்பகுதியில் ஏதேனும் உயிர் சேதங்கள் ஏற்படும் முன்னே கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-பேபி திவ்யக்குமார்.











