ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் திடீர் “கட்” : சு.ஆ.பொன்னுசாமி கண்டிப்பு…!!
பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்விற்கு பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முழுமையாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கிய நிலையில் அது தவறான தகவல் என நேற்று ஆய்வுக்கு பிறகு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் (காலை 6.07மணி) தற்போது வரை பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகம் நடைபெறவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முழுப்பூசணிக்காயை அல்ல ஒரு டைனோசரையே சாப்பாட்டு தட்டில் மறைக்க பார்க்கும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அ, தனது பணியை மனச்சாட்சிக்கு விரோதமின்றி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துவதோடு, பால் முகவர்களை கடந்த ஓராண்டு காலமாகவே இன்னலுக்கு உள்ளாக்கி வரும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கண்டித்துள்ளார்.
– ஊடகவியலாளன் கோவை ஆர்.கே.பி.