கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சி மற்றும் நாட்டு வைத்திய முகாம் 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பாரதிய நாட்டு வைத்திய மகா பாடசாலை மற்றும் ஹஜோவா இயற்கை மருத்துவமனை இணைந்து மாபெறும் மனித உடல் மற்றும் மனம் சார்ந்த புத்துணர்வு கலாச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் கரோலின் ஜோரொசாரியோ அவர்கள் வரவேற்புரை வழங்க நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி ரூபி அலங்கார மேரி அவர்கள் ஆசியுரை வழங்க, சென்னை ரோட்டரி கிளப் செயலர் Dr.அருளானந்தகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார் கல்லூரி மாணவித்தலைவி ஷாலினி நன்றியுரை வழங்க துவக்கவிழா இனிதே நிறைவுபெற்றது.
தொடர்ந்து பாரம்பரிய மருத்துவ முறையை மாணவிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் குறித்த கருத்தரங்கில் பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பற்றியும், உணவு முறைகள் பற்றியும், கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் பற்றி மிக அழகாக எடுத்துக் கூறப்பட்டது.
இப்பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சியில் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம், போன்ற நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மேலும் கேரளா, கர்நாடக தமிழ்நாட்டு மாநில வைத்தியர்கள் மற்றும் இயற்கை, சித்த மருத்துவர்கள் பங்கு கொண்ட மாபெரும் இலவச சித்தாவர்ம மருத்துவ நாட்டு வைத்திய முகாம் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் ஆகிய 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சிறப்பாக கலைநிகழ்ச்சி நடத்திய மாணவ மாணவிகளுக்கு சென்னை ரோட்டரி கிளப் சேர்மன் ரொட்டேரியன் ஆவுடையப்பன் விருதும், பதக்கங்களும் வழங்கினார்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.