
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி
இந்திய திருநாட்டின் 79- சுதந்திர தினத்தை முன்னிட்டு க. குமரெட்டையாபுரம் ஊராட்சி,
அ.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.
மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்கள்.
நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M.சாமி எப்போதும்வென்றான் இளம் மின் பொறியாளர் அருண்குமார் விளாத்திகுளம் வேளாண்மை அலுவலர் நவநீதன் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் சரத்குமார் கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர் விளாத்திகுளம் பணிமனை தொ.மு.ச செயலாளர் மாரிமுத்து ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ்பாண்டியன் கிளை செயலாளர்கள் அய்யாவு,பாலமுருகன்,ராஜேந்திரன் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரகுபதி தொமுச கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











